Saturday, March 9, 2013

மரண அறிவிப்பு..!


 
நம் ஊரைச்சார்ந்த ஜனாப் நூர் முகமது அவர்களின் மகனும், கேப்பைக்கலி என்கிற ஜனாப். நாகூர் பிச்சை அவர்களின் மருமகனும், ஜனாப். பஷீர் மற்றும் ஜனாப். அஷ்ரப் ஆகியோரின் சகோதரரும், ஜனாபா. ஹாசர் அம்மாள் அவர்களின் கணவருமான ஜனாப். ஹபீபுல்லா அவர்கள் 05-03-13 அன்று சவுதியின் ரியாத் நகரில் அதிகாலை மாரடைப்பால் காலமானார். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

 "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

அன்னாரின் ஜனாஸா 08-03-13 அன்று சவுதியின் ரியாத் நகரில் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின் நல்லடக்கம் செய்யப்பட்டது என்று அறிவிக்கப்படுகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ்கொடுப்பானாக. ஆமீன்.