Saturday, September 3, 2011

சவூதி வாழ் இந்தியர்களின் கவனத்திற்கு...!

 
சவுதியில் "ஹுரூப்" "Run away " "هرب" என்ற விதியை இந்தியர்கள் மீது வழுக்கட்டாயமாக திணித்து அவர்கள் பாதிக்கப்படுவதை ரத்துசெய்யும் பணியில், இந்திய வெளியுறவு துறை, இந்திய ஜனாதிபதி, இந்தியாவின்  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சவூதி அரேபியா தொழிலாளர் நலத்துறை, சவூதி மன்னரின் தனிப்பிரிவு போன்ற துறைகளின் தனிக்கவனத்திற்கு கொண்டு சென்று ஹுரூப் என்று சொல்லக்கூடிய அந்த கொடிய சட்டம் எந்த காரணமுமின்றி இந்தியர்கள் மீது பாயாமல் தடைசெய்ய, சவூதி அரேபியா மத்திய மண்டல தமுமுக மற்றும் கேரளா அசோகியேசன் இணைந்து கூட்டுநடவடிக்கைகள் மேற்கொள்ளவிருக்கின்றன. அதற்கான அனைத்து சட்டப்பூர்வ ஆலோசனைகளும் பெற்றப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. அல்ஹம்துலில்லாஹ். இது சம்பந்தமாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி அவர்களிடம் கேரளா அசோசியேசன் நிர்வாகிகள் மூலம் நேரடியாக பேசப்பட்டுள்ளது. சவூதி வாழ் இந்தியர்களின் நலனை கருத்தில் கொண்டு  இந்திய உச்சநீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கின் முக்கிய நோக்கம்:

சவூதியில் செயல்படும் இந்திய தூதரகத்திற்கு போதிய அதிகாரம் இல்லாததால் சவூதி அரேபியாவிற்கு பணிக்கு வரும் பணியாளர்களை அவர்களின் ஸ்பான்சர்கள் கொத்தடிமைபோல் நடத்தும் அவல நிலையும், வேலைக்கு தகுந்த ஊதியமின்மையும், உரிய நேரத்தில் சம்பளம் கொடுக்காததும் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு குறிப்பாக வீட்டு வாகன ஓட்டுனர்களுக்கு அவர்களின் இக்காமா, வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன விபத்து காப்பீடு போன்ற அடிப்படை உரிமைகள் கூட வழங்க மறுப்பது விபத்துகள் ஏற்பட்டால் தொழிலாளியின் ஊதியத்தில் பிடித்தம் செய்வது, வீட்டுப் பணிப்பெண்கள் படும் சொல்லொணாத் துயரங்கள்  போன்ற செயல்களை கண்டிக்கும் உரிமையை, பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு அவர்களுக்குரிய உரிமையை உரிய நேரத்தில் பெற்றுக்கொடுக்கும் புதிய முறையை கொண்டு வர சட்ட ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க இந்திய தூதரகத்தின் அதிகாரம் உயர்த்தப்படவேண்டும். இந்திய தூதரகத்தில் சவூதியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் காவலாளிகள் நியமிக்கப்படவேண்டும் 24 மணிநேரமும் அவசர உதவிக்கு தொடர்பில் இருக்க வேண்டும், இந்தியாவிலிருந்து பணிக்கு வரும் ஒவ்வொரு பணியாளருக்கும் வேலை ஒப்பந்த படிவத்தில் தூதரக மேற்பார்வையுடனான ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும் போன்ற அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிற தூதரகங்களுக்கு உள்ள உரிமை போன்று

சவூதி அரேபியாவில் செயல்படும் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் தற்போது (சில மாதங்களுக்கு முன்)  இலங்கை போன்ற தூதரகங்கள் தங்களின் முழு அதிகாரத்தை பயன்படுத்தி தன் நாட்டு குடிமக்களுக்கு நிவாரணமும் அவசர உதவிகளும் செய்து வருவது போல் 20 இலட்சத்திற்கும் அதிகமாக பணியாற்றும் இந்திய மக்களுக்கும் அவர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சவூதி தொழிலாளர் நல அமைச்சகத்திடம் முறையிட்ட போது முதன் முதலாக ஒரு இந்தியர் தனது மக்களுக்காக முறையிடும் முதல் புகாராக உள்ளது என்று வியந்து பாராட்டினார். இன்ஷா அல்லாஹ் அனைத்து உரிமைகளுக்கும் நாம் உதவிகள் செய்வோம் என்று சொல்லிய அமைச்சகம் முதலில் தங்களின் கோரிக்கையை இந்திய உச்ச நீதி மன்றத்திலும் பாராளுமன்றத்திலும் ஒலிக்கச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

அதனடிப்படையில் http://www.hurub.com என்ற இணைய தளம் கேரளா அசோசியேசன் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த இணையத்தில் உள்ள படிவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் முழுத்தகவல்களையும் உள்ளீடு செய்யவும். இதில் உள்ளீடு செய்யும் புகார்கள் அனைத்தும் உடனடியாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஜனாதிபதி மற்றும் வெளியுறவுத்துறை போன்ற துறைகளுக்கு நேரடியாகச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சவூதியில் 2 லட்சம் இந்தியர்கள் பாதிக்கபட்டு சட்ட உதவி தேவை உள்ளவர்களானக இருக்கிறார்கள் என்ற தகவல் நம்மை பெரும் துயரில் ஆழ்த்தி உள்ளது. அதிகாரப்பூர்வமான புகார்கள் முறையான வகையில் சென்றால்தான் நமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் ஆகவே இந்த இணையத்தில் உள்ள படிவத்தில் தங்கள் (சவூதி அரேபியாவில்) பகுதியில் பதிக்கப்பட்டுள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களின் தகவல்களை உள்ளீடு செய்யும் படி கேட்டுக் கொள்கிறோம்.

இந்த ஹூரூப் என்று சொல்லக்கூடிய சட்டம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் ஒருவரிடம் 15 ஆண்டுகள் பணியாற்றிய ஒருவர் தனது பணியை முடித்துக் கொண்டு தாயகம் திரும் முடிவெடுக்கிறார் என்றால் அவர் பணியாற்றிய அந்த 15 ஆண்டுகளின் சர்வீஸ் பணம் வழங்க வேண்டும் அதை வழங்காமல் அவரது பாஸ்போர்ட்டை ஜவாசத்தில் (பாஸ்போர்ட் அலுவலகத்தில்) ஒப்படைத்து இவர் ஓடி விட்டார் என்று அவரின் ஸ்பான்சர் புகார் செய்தால் எந்த கேள்வி கணக்குமின்றி அவர் குற்றாவாளி பட்டியாளில் சேர்ந்து விடுகிறார். ஏற்கனவே அவரின் கைரேகைகள் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அதன் பின் அவர் எந்த நிலையிலும் சவூதி மற்றுமின்றி வலைகுடாவின் எந்தப் பகுதிக்கும் வர முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

இந்தச் சட்டத்திலிருந்து நமது நாட்டினரை பாதுகாக்க நமது தூதரகத்திற்கு அதிகாரம் உயர்த்தப்பட வேண்டும். ஒரு இந்தியர் ஹுரூப் சட்டத்தின் கீழ் வந்தால் தூதரகம் தலையிட்டு உண்மைநிலையை கண்டறிந்து உடனடியாக அவருக்கு நீதி கிடைக்க முன்வரவேண்டும் அதற்கு இந்தியத் தூதரகத்தின் தரம் உயர்த்தப்பட்டு சவூதி வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 3ம் தேதி தற்போதுள்ள இந்தியத் தூதர் தனது பணிக்காலம் முடித்து திரும்பிச் செல்கிறார். புதிய தூதர் அடுத்த 15 ம் தேதி பொறுப்பேற்க உள்ளார். புதிய தூதர் UNல் பணியாற்றிய IAS அதிகாரி என்று அறிந்துள்ளோம். அவர் பொறுப்பிற்கு வரும் முன் வேண்டிய தகவல்கள் சேகரித்து இன்ஷா அல்லாஹ் கோரிக்கைகள் முன் வைக்க ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

சவூதியில் உள்ள அனைத்து சமூகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும் உங்களுக்குத் தெரிந்த பாதிக்கப்பட்டவர்களின் முழுத்தகவல்களையும் இந்த இணைய முகவரியில் 
http://www.hurub.com பதிவு செய்யும் படி கேட்டுக் கொள்கிறோம்.

குறிப்பு: இந்த மின்அஞ்சலை அனைத்து சகோதரர்களுகம் அனுப்பி வைக்கவும். முடிந்தால் இந்திய பிராந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்து அனைவரையும் சென்றடையச் செய்யவும். 20 இலட்சம் இந்தியர்களின் பாதுகாப்பு நடவடிக்கையில் தாங்களும் பங்கெடுக்கும் படி அழைக்கின்றோம்.


நன்றி: மின்னஞ்சல்

Wednesday, August 3, 2011

வெளியூர் செல்லும் பெண்களுக்கு எச்சரிக்கை.!




அன்புச்சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும்.

எங்கள் ஊர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற திடுக்கிடும் சம்பவம் ஒன்றை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

சில தினங்களுக்கு முன் ஒரு நாள்.   நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள மஞ்சக்கொல்லை என்ற கிராமத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் இருவர் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றனர்.

இருவரும் சம வயது உடையவர்கள்.   சுமார் 25 வயது இருக்கும்.   அவர்களுள் ஒருவர் உடல் சுகவீனமானவர்.   இன்னொரு பெண்மணி அவரது தோழி.   அந்த நோயாளிப் பெண் அவ்வப்பொழுது தஞ்சாவூர் சென்று அங்குள்ள நரம்பியல் மருத்துவ நிபுணரிடம் உடல் பரிசோதனை செய்து கொண்டு, மருந்து மாத்திரைகள் வாங்கி வருவது வழக்கம். அதுபோலத்தான் அன்றும் நடந்தது.

இருவரும் தஞ்சாவூர் சென்று மருத்துவரிடம் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு மருந்து மாத்திரைகள் வாங்கி வருவதற்குள் மக்ரிப் நேரமும் முடிந்து விட்டது. உடனடியாக தஞ்சையில் பேருந்தில் ஏறினால்தான் இரவு 10 மணி வாக்கில் மஞ்சக் கொல்லை போய்ச் சேரமுடியும் என்பதால் மருத்துவமனையில் இருந்து தஞ்சை பழைய பேருந்து நிலயத்திற்குச் செல்ல ஏதாவது ஆட்டோ கிடைக்காதா என்ற பரபரப்பில் இருந்தனர்.   அப்போதுதான், தேடிச்சென்ற மூலிகை காலடியில் கிடைத்தது போல அவர்கள் முன் ஒரு ஆட்டோ வந்து நின்றது.  அந்த ஆட்டோவில் ஏற்கனவே ஒரு ஆணும் பெண்ணும் அமர்ந்திருந்தனர். 

இருவருக்கும் நடுத்தர வயதிருக்கும். கணவன் மனைவி போலத் தோன்றியது.   ஒரு வேளை அது ஷேர் ஆட்டோவாக இருக்குமோ என்று அந்த முஸ்லிம் பெண்கள் இருவரும் மனதிற்குள் எண்ணிக் கொண்டிருக்கையில் அந்த ஆட்டோ ஓட்டுனர் முஸ்லிம் பெண்களைப் பார்த்து "நீங்கள் எங்கே செல்ல வேண்டும்" என்று கேட்க, அதற்கு அவர்கள் "பழைய பேருந்து நிலையம் செல்ல வேண்டும்" என்று சொன்னவுடன், "சரி ஏறுங்கள்" என்று ஓட்டுனர் சொல்ல, ஏற்கனவே அந்த ஆட்டோவில் உட்கார்ந்திருந்த கண்வன் மனைவி ஜோடி அந்த முஸ்லிம் பெண்களைப் பார்த்து "வாங்க, வாங்க நாங்களும் அங்குதான் செல்கிறோம்" என்று அவர்கள் இருவரும் நெருங்கி அமர்ந்து கொண்டு இவர்களுக்கு இடம் கொடுக்க, அடுத்த சில வினாடிகளில்  தங்களுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தைச் சிறிதும் முன்கூட்டி உணரச் சக்தியற்ற அந்த அப்பாவி முஸ்லிம் பெண்கள் ஆட்டோ ஓட்டுனரின் கனிவையும் உள்ளே அமர்ந்திருந்த கணவன் மனைவியின் பெருந்தன்மையையும் வெறும் நடிப்பென அறியாது ஆட்டோ உள்ளே சென்று அமர்ந்தனர்.   ஆட்டோவும் சிட்டெனப் பறந்தது. 
மருத்துவமனையில் இருந்து பழைய பேருந்து நிலையத்திற்கு ஆட்டோவில் செல்ல 5 நிமிடம் கூட ஆகாது.   ஆனால், அந்த ஆட்டோவோ கிட்டத்தட்ட 10 நிமிடங்களாகியும் நிற்காமல் போய்க்கொண்டே இருப்பதையும், பேருந்து நிலையம் செல்லாமல் வேறு எங்கோ செல்வதையும் அறிந்த முஸ்லிம் பெண்கள் தாங்கள் ஏதோ ஆபத்தில் சிக்கிக் கொண்டோம் என்பதை உணர்வதற்குள் ஆட்டோ தஞ்சை நகரைத் தாண்டி வெகு தூரம் சென்று ஆள் அரவமற்ற பகுதியை நோக்கி சென்று கொண்டே இருந்தது.   என்ன
செய்வதென்று அறியாத அந்த அப்பாவிப் பெண்கள் "காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!" என்று கதறியழ ஆரம்பித்தனர். 

உடனே, உள்ளே அமர்ந்திருந்த கணவன் தன் உடம்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியே எடுத்து அந்த முஸ்லிம் பெண்ணின் கழுத்தில் வைத்து "சத்தம் போட்டால் இங்கேயே உங்கள் இருவரையும் கொன்று விடுவேன்" என்று மிரட்ட, அவன் கூட வந்த பெண் முஸ்லிம் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கக் கரியமணியைப் பறிக்க ஆரம்பித்தாள்.  முஸ்லிம் பெண் அதனை எதிர்க்க முயற்ச்சிக்க முகத்தில் சரமாரியாக அடியும் குத்துக்களும் விழவே,  முஸ்லிம் பெண் நிலை குலைந்து போனாள்.   உடனே அந்த கணவன் மனைவி ஜோடி முஸ்லிம் பெண்கள் இருவரிடமிருந்தும் செய்ன்கள், தோடுகள், வளையள்கள் அனைத்தையும் பிடுங்கிக்கொண்டு,  இருவரையும் ஓடும் ஆட்டோவிலிருந்து தள்ளிவிட்டுச்சென்று மாயமாய் மறைந்து விட்டனர். 

அந்த அதிர்ச்சியை தாங்கச் சக்தியற்ற முஸ்லிம் நோயாளிப்பெண் மூர்ச்சையுற்று விழ, உடன் சென்ற தோழி முதல் உதவி செய்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றியிருக்கிறாள். அல்ஹம்துலில்லாஹ்.  பின்பு, இருவரும் ஒருவாறு சுதாரித்துக்கொண்டு நெடுஞ்சாலையை அடைந்து அந்த சாலை வழியே வந்த பேருந்தை கையைக் காட்டி நிறுத்தி தங்களுக்கு ஏற்பட்ட ஆபத்தை எடுத்துச் சொல்ல, அந்த பேருந்தில் இருந்த நல்ல மனிதர் ஒருவர் அவர்கள் இருவரையும் ஆசுவாசப்படுத்தி, தைரியமூட்டி, குளிர்பானம் வாங்கிக் கொடுத்து அவர்களிடம் ரூ. 100ம் கொடுத்து நாகை செல்லும் பேருந்தில் ஏற்றி விட்டிருக்கிறார். 

மேற்படி சம்பவத்தில் அந்த முஸ்லிம் பெண்ணின் கைப்பையையும் அந்த ஜோடி பறித்துக் கொண்டது.  அதில் சில ஆயிரம் ரூபாய்களும், செல்போனும், ஏடிஎம் கார்டும் இருந்தன. நல்ல வேளையாக அந்தத் தோழிப் பெண் கவரிங் நகைகள் அணிந்திருந்தாள். இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன. 

1.  ஆண் துணையின்றி வெளியூர் செல்வதை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.
2.  வேறு வழியின்றி பெண்கள் மட்டும் செல்ல வேண்டியிருந்தால் இரவுப்
பயணத்தைத் தவிர்க்க முயற்சியுங்கள்.
3. தங்க ஆபரணங்களைத் தவிர்த்து கவரிங் நகைகளை அணிந்து செல்லவும்.
4.  செல்போன், ஏடிஎம் கார்டு, பணம் இவற்றை கைப்பையில் வைக்காமல் தங்களின்
மறைவிடங்களில் வைத்துக் கொள்ளவும்.   ( உ-ம் ப்ளவ்ஸ் உள்ளே)
5. ஆட்டோ அல்லது டாக்ஸி போன்ற வாகனங்களில் ஏறும் முன் அந்த வாகனங்களின்
எண்ணை குறித்து வைத்துக் கொள்ள  மறவாதீர்கள்.
6. அறிமுகமில்லாத எந்த நபரையும் எளிதில் நம்பி ஏமாறாதீர்கள்.  அவர்களைக்
கொஞ்சம்  சந்தேகக்கண்கொண்டு பார்ப்பதில் தவறில்லை.
7.  தைரியம் உள்ள பெண்கள் கொஞ்சம் மிளகாய்த் தூள் போன்றவற்றைத் தங்கள்
கை வசம் வைத்துக் கொள்ளவும்.   ( இது தைரியமான பெண்களுக்கு மட்டும் தான்.)

அன்புடன்,

அ.பஷீர் அஹமது,
ஓய்வு பெற்ற அகில இந்திய வானொலி இஞ்சினீயர்,
மஞ்சக்கொல்லை.


நன்றி: மின்னஞ்சல்

Wednesday, July 6, 2011

மரண அறிவிப்பு..!



நம் ஊரின் புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம். ஜனாப். ஹமீது சுல்தான் அவர்களின் மனைவியும், அசரஃப் மற்றும் ராஜா முகமது ஆகியோரின் தாயாருமாகிய ஜனாபா. ஜெயின்ஷா அவர்கள் 05-07-11 அன்று மாலை காலமானார்கள். 

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

அன்னாரின் ஜனாஸா புதுப்பட்டினம் புதுமனைத்தெருவில் இருக்கும் அவர்களின் இல்லத்தில் வைக்கப்பட்டு, மறுநாள் காலை நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.   

எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸ்கொடுப்பானாக. ஆமீன்.

Wednesday, March 23, 2011

தெரியுமா உங்களுக்கு..?!!

1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.

2) குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைய முற்படும் போது என்ற இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்ததானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும் அல்லது http://www.bharatbloodbank.com/ பார்க்கவும்.

3) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://www.campuscouncil.com/ என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியும்.

4) மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

5) தீ விபத்துக்களினாலோ அல்லது பிறக்கும் போதே வாய், காது , மூக்கு போன்ற உறுப்புக்களின் வளர்ச்சி குறைந்த நிலையில் இருந்தாலோ இலவசமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள முடியும். வரும் மார்ச் மாதம் 23-ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4--ம் தேதி வரை ஜெர்மானிய மருத்துவர்கள் PASAM Hospital , Kodaikanal மருத்துவமனைக்கு வரவிருக்கின்றார்கள். மேலும் தகவல்களைப் பெற 045420 240668,245732 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

6) வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.

7) அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே!

அதனால் நம்மால் முடிந்த வரை மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம்.

**நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்
**ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.

8) இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை நட்டு அவற்றிற்கும் மரியாதை செய்வோமே!!

9) கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும். http://ruraleye.org/

10) பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471

11) இரத்தப் புற்று நோய்:

"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.

மேலும் விபரங்களுக்கு முகவரி:
East Canal Bank Road, Gandhi Nagar,
Adyar Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241

12) விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள். 







நன்றி: மின்னஞ்சல்

Saturday, March 12, 2011

ஜப்பானை சீரழித்த சுனாமி..!



நேற்று வெள்ளிக்கிழமை காலை ஜப்பானில் 8.9 ரிக்டர் அளவில் மிகவும் மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் அந்நாட்டில் பெரும் சீரழிவு ஏற்பட்டிருக்கிறது. ஜப்பானின் தலைநகரமான டோக்கியோ இந்த சுனாமியால் முழுமையாக சிதைந்து போய் கிடக்கிறது. டோக்கியோ நகரின் வடக்குப்பகுதியில் இருந்த செண்டாய் ஏர்ப்போர்ட் முழுமையாக சுனாமியால் தாக்கப்பட்டு நிலை குலைந்து விட்டது. 150 ஆண்டுகளில் இப்படி ஒரு சுனாமியை ஜப்பான் சந்தித்ததில்லை என்று சொல்லப்படுகிறது. 

உயிரழந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு வருகிறது. கடற்கரைகளில் சுனாமியால் அடித்து செல்லப்பட்ட கார்கள், வீடுகள், மரங்கள் என்று குப்பை மேடாய் எங்கும் காட்சி அளிக்கிறது. பெரும் உயர கட்டிடங்களும் இந்த சுனாமியால் தாக்கப்பட்டு தீப்பிடித்து எரிந்த வண்ணம் இருக்கிறது. ஜப்பானில் உள்ள எண்ணை, எரிவாயு ஆலைகள் தீப்பிடித்து எரிந்து நாசமாகியது. அணு உலைகளையும் சுனாமி சிதைத்திருப்பதால் அணுக்கதிர் கதிர் வீச்சு அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஜப்பான் அரசு அறிவித்திருக்கிறது. நகரத்தின் பாலங்கள், சாலைகல் பெருத்த சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. நேற்று வரை வல்லரசாக வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் இன்று வாழ்க்கையை தொலைத்து விட்டு வாசலில் நிற்கிறார்கள். இது தான் இவ்வுலக வாழ்க்கையின் எதார்த்தம்..!!!

ஜப்பான் முன்பு போல் மறுவாழ்வு பெற்று நிமிரவும், அந்நாட்டு மக்கள் இழந்தவற்றை பெற்று நிம்மதியான வாழ்க்கையடையவும் இறைவனை பிரார்த்திப்போம்..!

சுனாமியால் சீரழிந்த ஜப்பானின் சோகக்காட்சிகள் புகைப்படங்களாக கீழே உள்ள சுட்டியில் காணலாம்.
http://www.theatlantic.com/infocus/2011/03/earthquake-in-japan/100022/



குறிப்பு: ஜப்பானின் இந்த பேரழிவில் காணாமல் போனவர்களை தேட நம் தளத்தின் இடது பக்கத்தில் உள்ள ”ஜப்பான் சுனாமி - விபரம் தேட” என்ற தேடும் வசதியை பயன்படுத்தி, அதில் தேடி விபரம் அறியலாம். I'm looking for someone என்பதை சுட்டிய பிறகு வரும் காலி இடத்தில் தேடப்படுவரின் பெயரை கொடுத்தால் அவரின் தற்போதைய விபரம் கிடைக்கும். 

வளைகுடா வேலை வாய்ப்புகள் - 12/03/2011

 நம் சமுதாயத்தில் முன்பு இருந்த கல்வியறிவின்மை இப்பொழுது குறைந்து வருகிறது. இருந்தாலும் அவர்களுக்கு நம் நாட்டு நிறுவனங்களில், அரசு வேலைகளில் வேலை வாய்ப்பு என்பது குதிரைக்கொம்பாகத்தான் இருந்து வருகிறது. அதற்கு காரணம் நம் சமுதாயம் மற்றவர்களால் ஒதுக்கப்படுவதும், நம்மவர்கள் மற்றவர்களுடன் கடுமையாக போட்டியிடும் அளவுக்கு திறமையில்லாததும் மற்றும் தேவையான கல்வித்தகுதி இல்லாததும் தான். அப்படிப்பட்டவர்களுக்கு வளைகுடா நாடுகளின் வேலை வாய்ப்புகள் தான் வரப்பிரசாதம். நம் சமுதாயத்தினர் பயன்பெறும் வகையில் வளைகுடா வேலைவாய்ப்புகள் நம் தளத்தில் வலையேற்றப்படும். வேலைக்கு தேவையான தகுதி, திறமை, அனுபவம் உள்ளவர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வளைகுடா வேலை வாய்ப்புகள்:

Service Manager - Kuwait
http://www.jobshob.org/2011/03/service-manager-kuwait.html


Landscape Designer / Landscape Sales Representative / Production Supervisor / Quality Control Inspector / Purchasing Manager - Qatar
http://www.jobshob.org/2011/03/landscape-designer-landscape-sales.html


Sales Engineer / Electro / Mechanical Technician / Stock Controller - Saudi Arabia
http://www.jobshob.org/2011/03/sales-engineer-electro-mechanical.html

Accounts / Admin Assistant / Storekeeper / Quality Controller - UAE
http://www.jobshob.org/2011/03/accounts-admin-assistant-storekeeper.html


Multiple Job Positions for a EPC and Construction Company - Saudi Arabia
http://www.jobshob.org/2011/03/multiple-job-positions-for-epc-and.html


Multiple Job Positions for EPC Contractor - UAE, Qatar, Saudi Arabia
http://www.jobshob.org/2011/03/multiple-job-positions-for-epc.html


Microsoft Engineer Certified / Cisco Engineer / Java Programmer / C++ Nell Programmer - Saudi Arabia
http://www.jobshob.org/2011/03/microsoft-engineer-certified-cisco.html

Senior Accountant - UAE
http://www.jobshob.org/2011/03/senior-accountant-uae.html


Business Analyst / Engineer - UAE>>Monday, March 07, 2011
http://www.jobshob.org/2011/03/business-analyst-engineer-uae.html


Archive Personnel - Saudi Arabia
http://www.jobshob.org/2011/03/archive-personnel-saudi-arabia.html

Data Center Operations Officers - UAE
http://www.jobshob.org/2011/03/data-center-operations-officers-uae.html


Chief Accountant - Yemen
http://www.jobshob.org/2011/03/chief-accountant-yemen.html


Accountant / Site Engineers / General Foreman / Head of Carpentry - UAE
http://www.jobshob.org/2011/03/accountant-site-engineers-general.html


Business Associate / Project Manager - GCC
http://www.jobshob.org/2011/03/business-associate-project-manager-gcc.html


English Teacher / Arabic Language Teacher - Qatar
http://www.jobshob.org/2011/03/english-teacher-arabic-language-teacher.html

Staff Nurses - Yemen
http://www.jobshob.org/2011/03/staff-nurses-yemen.html

Enterprise Application Manager - Bahrain
http://www.jobshob.org/2011/03/enterprise-application-manager-bahrain.html


Accountant Required - UAE
http://www.jobshob.org/2011/03/accountant-required-uae.html


Project Manager / Purchasing / Procurement Manager / Operation and Maintenance Manager / Salesperson / Sales Manager - Qatar, Saudi Arabia, UAE, Oman
http://www.jobshob.org/2011/03/project-manager-purchasing-procurement.html

Logistics Coordinator - Saudi Arabia
http://www.jobshob.org/2011/03/logistics-coordinator-saudi-arabia.html


Deputy HR Manager - Bahrain
http://www.jobshob.org/2011/03/deputy-hr-manager-bahrain.html

Electrical Maintenance Technician / Lifting and Rigging Supervisor / Rotating Equipment Supervisor / Planner / Schedulers / Turnaround Planners - Qatar
http://www.jobshob.org/2011/03/electrical-maintenance-technician.html


Project Coordinator / Site/Civil Engineer / Document Controller and Draftsman - Qatar
http://www.jobshob.org/2011/03/project-coordinator-sitecivil-engineer.html

AutoCAD Operator - Saudi Arabia
http://www.jobshob.org/2011/03/autocad-operator-saudi-arabia.html


Monday, March 7, 2011

நடுநிசி நாய்களின் அட்டகாசம்..!!


சில நாட்களுக்கு முன் நம் ஊர் சகோதரர் ஒருவர் என்னிடம் ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். அதை அவர் மிகவும் வருத்தம் மற்றும் வேதனையுடன் சொன்னார். அவருக்கு ஆறுதலையும், எனக்கு தெரிந்த தீர்வையும் சொல்லிவிட்டு அந்த விஷயத்தை மறந்தே விட்டேன். ஆனால் சமீபத்தில் நம் ஊருக்கு அருகில் இருக்கும் அதிரையை சார்ந்த சகோதரர் ஒருவர் தன் வலைப்பூவில் இதே விஷயத்தை எழுதியிருந்ததையும், இது போல் பல இடங்களில் நடந்ததாக குறிப்பிட்டிருந்ததையும் படித்து அதிர்ந்து போனேன். இது உண்மையிலேயே கவலைக்குரிய விஷயம் என்பதாலும், கவனமாக கையாளவேண்டியது என்பதாலும் இங்கே எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இந்திய முஸ்லீம்களை பொறுத்த வரை குறிப்பாக தமிழக முஸ்லீம்கள் பெரும்பாலும் வெளிநாட்டையே பொருளாதாரத்திற்காக நம்பி இருப்பது நாம் அறிந்ததே. இதற்காக நாம் மனைவி, மக்கள், குடும்பம் எனப்பிரிந்து வந்து வெளிநாடுகளில் வாழ வேண்டிய சூழல். இந்த நிலையில் இருக்கும் நம் பெண்களை தவறான வழிக்கு இழுக்கும் விதமாக சிலர் திட்டமிட்டு நடப்பது தெரிகிறது. அதை சொல்வதற்கு முன் ஒரு விஷயத்தை இங்கே சொல்ல வேண்டியது அவசியம். தொழில்நுட்பம் வளர்ந்து நிற்கும் இந்த காலகட்டத்தில் நம் அந்தரங்கம் என்பது இல்லாமல் போய், எல்லாம் அம்பலம் ஆகும் என்ற நிலை உருவாகி விட்டது. நம் மின்னஞ்சலில் இருந்து தொலைபேசி உரையாடல் வரை தீயவர்கள் விரும்பினால் நாம் அறியாமலேயே அதை அவர்கள் அறியும் நிலை இருந்து வருகிறது.

குறிப்பாக இப்பொழுதெல்லாம் மனைவியுடன் பேச வேண்டும் என்றால் அதிகம் நாம் தொலைபேசியையே நாடுகிறோம். VOIP எனப்படும் இணையம் வழியிலான தொலைபேசி மலிவாகி போனதால் மணிக்கணக்கில் பேசும் நிலை இப்பொழுது இருந்து வருகிறது. வக்ர குணம் படைத்த தீயவர்கள் கணவன் மனைவி உரையாடலை கேட்கவும், பதிவு செய்து தவறான வழியில் பயன்படுத்தவும் வழி இருக்கிறது. சமீபத்தில் அப்படி நடந்த விஷயங்கள் நக்கீரன் பத்திரிக்கை மூலம் வெளியே வந்திருக்கிறது. நாம் VOIP மூலம் பேசினாலும் நாம் அழைக்கும் தொலைபேசிக்கு நம் அழைப்பு இந்திய தொலைபேசி நிறுவனங்கள் வழியாகத்தான் போகின்றன. இந்த நிறுவனங்களில் பணிபுரியும் கேடு கெட்ட சிலர் அவற்றை ஒட்டுக்கேட்கிறார்கள். குறிப்பாக அடிக்கடி பேசப்படும், நீண்ட நேர தொலைபேசி உரையாடல்கள் இந்த நிலைக்கு ஆளாவதாக சொல்லப்படுகிறது. இரவு நேரங்களில் அவர்கள் வேலை செய்யும் பொழுது மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க தனிமை அதிகம் இருப்பதாலும், பொழுது போக்கவும் இரவில் பேசப்படும் உரையாடல்களே அதிகம் ஒட்டுக்கேட்கப்படுகின்றன.

பொதுவாக VOIP மூலம் பேசும் பொழுது அழைப்பவரின் தொலைபேசி எண்கள், அழைப்பை பெறுபவரின் தொலைபேசியில் தெரியாது. இதனால் யார் அழைக்கிறார்கள் என்பது தெரியாது என்பதால் தீயவர்களுக்கு மிகவும் வசதியாக போய்விட்டது. நம் ஊர் சகோதரர் சொன்ன விஷயத்திற்கு வருகிறேன். அவர் மனைவிக்கு இவர் இரவு நேரங்களில் வழக்கமாக அழைத்து பேசுவது வழக்கம். இது யாரோலோ மிகத்தீவிரமாக ஒட்டுக்கேட்கப்பட்டிருக்கிறது. ஒரு முறை அவர் பேசி முடித்த பின் அவர் மனைவி நன்றாக தூங்கும் நேரமான நள்ளிரவில் அழைப்பு வந்திருக்கிறது. எடுத்து காதில் வைத்தால் யாரும் பேசவில்லை. மூச்சு விடுவது மட்டும் தான் காதில் விழுந்திருக்கிறது. அவர் மனைவியோ தன்னிடம் கணவன் விளையாட்டுக்கு இப்படி செய்வதாக நினைத்து விட்டார். அடுத்த சில நாட்களும் இதே தொடர கணவனுக்கு தெரியப்படுத்தி இருக்கிறார். உஷாரான அவர் இனி நடுநிசியில் நான் அழைக்க மாட்டேன், அழைப்பு வந்தால் எடுக்காதே என்று சொல்லிவிட்டார். அதன் போலவே நள்ளிரவுகளில் வந்த அழைப்புகளை எடுக்காவிட்டாலும் கைப்பேசியின் சத்தத்தால் தூக்கம் தொலைந்து போனது தான் மிச்சம். அதனால் தூங்கும் முன் கைப்பேசியை அணைத்து விட்டு வைக்க தொடங்கியிருக்கிறார்.

அடுத்த சில நாட்களில் இரவு 8 மணிக்கு அழைத்த ஒருவன் சகோதரரின் பெயரை சொல்லி கேட்டிருக்கிறான். பெயரை சொன்னதால் நம்பிய அவர் மனைவி என்ன விஷயம் என கேட்டிருக்கிறார். அதை காதில் வாங்கி கொள்ளாமல் சகோதரர் மனைவியின் ஊர், முகவரி எல்லாம் கேட்டிருக்கிறான். எச்சரிக்கையான சகோதரி இணைப்பை துண்டித்து விட்டிருக்கிறார். இதாவது பரவாயில்லை.. அதன் பிறகு நடந்தது தான் கவலையின் உச்சம். ஒரு முறை தன் கைப்பேசிக்கு பகலில் அழைப்பு வந்த பொழுது கணவன் அழைப்பதாக நினைத்து எடுத்து கேட்டிருக்கிறார். நம் சகோதரரின் குரலைப்போலவே, அவரின் பேச்சு நடையிலேயே நலம் விசாரித்திருக்கிறான். ஆனாலும் அது தன் கணவன் இல்லை என்று சரியாக கண்டுபிடித்த சகோதரி இணைப்பை துண்டித்து விட்டு உடன் கணவனுக்கு தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் தான் அவர் என்னிடம் இதை பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக இணையத்தில் நான் தகவல் தேடிய போது இது போல் நிறைய இடங்களில் நடந்திருப்பது தெரிய வந்தது. இந்த பிரச்சினைக்கு நாம் எச்சரிக்கையாக இருப்பதை தவிர வேறு ஒன்றும் தீர்வாக இருக்க முடியாது. பெண்களின் தனிமையை பயன்படுத்தி அவர்களின் பக்கம் இழுக்கலாம் என்பது இந்த இழிபிறவிகளின் திட்டமாக இருக்கலாம். அவர்கள் திட்டம் நிறைவேறாது என்றாலும் இது மனதளவில் வெளிநாட்டில் இருக்கும் கணவர்களுக்கும், ஊரில் இருக்கும் மனைவிகளுக்கும் பெரும் மன உளைச்சலை கொடுக்கும் என்பது உறுதி.

இது போன்ற மோசமான அழைப்புகள் பெண்களுக்கு அடிக்கடி வரும் பட்சத்தில் அந்த தொலைபேசி எண்ணை உடனடியாக மாற்றி விட வேண்டும் என்பது என் எண்ணம். அதே போல் இரண்டு கைப்பேசி வைத்திருக்கும் சகோதரர்கள் தன் இருக்கும் நாட்டின் கைப்பேசி எண்ணிலிருந்து ஒரு முறை அழைத்து (missed call) பிறகு VOIP மூலம் அழைக்கலாம். இதன் மூலம் அழைப்பது தன் கணவர் தான் என்று மனைவி உறுதி செய்த பின் அழைப்பை எடுக்கலாம். அது மட்டுமல்லாமல், மனைவியின் தொலைபேசி எண்ணை தேவையில்லாமல் மற்றவர்களிடம் கொடுக்காமல் தவிர்க்க வேண்டும். பேசும் பொழுது நம்முடைய பெயர், முகவரி உள்ளிட்ட முக்கிய விபரங்களை பேசக்கூடாது. இப்படி எல்லாம் செய்வதன் மூலம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.

திருடன் திருந்துவான் என்று எதிர்பார்ப்பது தவறு. அவன் குற்றம் செய்ய வாய்ப்பை நாம் ஏற்படுத்தி கொடுக்காமல் எச்சரிக்கையாக இருப்பதே இதற்கு நிரந்தர தீர்வு..!!

Sunday, March 6, 2011

கனவுகளை நனவாக்கும் கல்விச் செல்வம்..!!





இந்திய அரசு நிர்வாகம் தொடர்பான முக்கிய பதவிகளுக்குக்கான நுழைவு தேர்வை மத்திய அரசின் UPSC வருடா வருடம் நடத்தி வருகின்றது. மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்), காவல் துறை ஆணையர் (கமிஷனர்), சுங்கத்துறை (கஸ்டம்ஸ்), வெளியுறவு துறை உட்பட 24 அரசு உயர் பதவிகளுக்கான (IAS, IPS, IFS உள்ளிட்ட)  முதல் கட்ட நுழைவு தேர்வு Civil Services Preliminary Examination 2011  விண்ணப்பம் தற்போது  விநியோகிக்கப்பட்டு வருகின்றது. தேர்வை பற்றிய முழு விபரம் கீழே: 

இந்தியாவையே நிர்வகிக்கும் முக்கிய அரசு பதவிகளுக்கான தேர்வு என்றும் இதை சொல்லலாம். முஸ்லீம்கள் ஒடுக்கப்படுவதற்கும், உரிமைகள் நசுக்கப்படுவதற்கும் இது போன்ற மாவட்ட ஆட்சியர், காவல் துறை ஆணையர், காவல் துறை கண்காணிப்பாளர் போன்ற உயர் பதவிகளில் முஸ்லீம்கள் இல்லாததே அல்லது மிக குறைவாக இருப்பதே காரணம்.  இந்த தேர்வை எழுதி வெற்றி பெறுவதன் மூலம் நாமும்  மாவட்ட ஆட்சியராகவும், காவல் துறை ஆணையராகவும், உள்துறை, உளவுத்துறை என இந்தியாவின் முக்கிய அதிகார பொறுப்புகளில் அமர முடியும்.  இந்த தேர்விற்கான கட்டணம் வெறும் ரூ.70 தான். இப்படி அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்வை எழுதும் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக குறைவு. முஸ்லீம் சமூகத்தை பாதுகாக்க களம் இறங்குங்கள் மாணவர்களே..!!

இது வெறும் தேர்வு அல்லது வேலை மட்டும் அல்ல. இதன் மூலம் நீங்கள் அதிகாரம் படைத்த பதவிகளில் இருப்பதோடு மட்டுமல்லாமல், இந்த பணிகளில் சேர்வதன் மூலம் நமது சமுதாயத்திற்கு பாதுகாப்பும், உரிமையும் பெற்றுத் முடியும். குஜராத்திலும், கோவையிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும்,  அவ்வளவு ஏன்.. சமீபத்தில் நம் ஊரில் கூட நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான கோர தாக்குதலுக்கு இந்த துறைகளில் நாம் இல்லாததே (அல்லது மிக குறைவாக இருப்பதே) காரணம்.  நம் சமுதாய முன்னேற்றத்திற்கும், பாதுகாப்பிற்கும் இது போன்ற தேர்வுகளில் நமது சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெற்று இது போன்ற பதவிகளில் அமருவதின் மூலமே நமது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இன்னும் எத்தனை காலம் தான் நாம் ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று வாழ்வது..?  நமது உரிமையை மீட்க, சமுதாயத்திற்கு பாதுகாப்பு வழங்க நாமும் உயர் பதவிகளில் அமர்வோம்.. வாருங்கள்..!!

இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருக்கிறது. காரணம், இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுங்கி விடுவதாலும் தான். உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இந்த தேர்வுகள் கடினமில்லை.  இது போன்ற தேர்வுகளை எழுதி உயர் பதவிகளில் இருப்பவர்கள் உயர் சாதியினர் என்று தங்களை சொல்லிகொள்பவர்கள். இதற்கு அவர்கள் செய்யும் முதல் வேலை IAS, IPS போன்றதேர்வுகள் மிக மிக கடினமானவை என்றும், சாதாரண மக்கள் இந்த தேர்வுகளை எழுத முடியாது என்ற மாயையை பரவ விட்டிருப்பது. இதனால் தேர்வு எழுத துணியும் மற்ற சமுதாய மாணவர்களின் தன்னம்பிக்கையை தகர்ப்பதும், பிறறை இந்த தேர்வுகளை எழுதவிடாமல் தடுப்பதையும் அவர்கள் தந்திரமாக செய்து வருகிறார்கள்.

இதை மாற்ற நாமும் UPSC (IAS, IPS) தேர்வு எழுதி தேர்ச்சி  பெற  வேண்டும். தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள். எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க இறைவன் இருக்கின்றான், அவன் மீது நம்பிக்கை வைத்து, கடினமாக உழைத்து படியுங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும் இன்ஷா அல்லாஹ்..!!

இந்த தேர்விற்கு எப்படி தயாராவது?
இந்த தலைப்பிலே பல புத்தகங்கள் புத்த கடையில் கிடைக்கும்.  பொதுவாக பயிற்சி நிறுவங்களில் சென்று பயிற்சி பெறுவதன் மூலம் எளிதில் இந்த தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறலாம். தமிழகத்தில் சென்னை சைதாபேட்டையில் உள்ள மனித நேய அறகட்டளை நடத்தும் பயிற்சி மையம் இது போன்ற தேர்வுகளுக்கு பிரசித்தி பெற்றது. பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவசமாகவும் பயிற்சி அளிக்கின்றனர். முஸ்லீம்களில் சிலர் Civil Services Examination பயிற்சி மையங்களை நடத்தி வருகின்றனர்.  சிலர் துவங்க இருகின்றனர். குறிப்பாக சென்னையில் கிரசென்ட் கல்லூரியில் ஒரு பயிற்சி மையமும், சகோ. M.F. கான் அவர்கள் நடத்தும் ஒரு பயிற்சி மையமும் உள்ளது.  கள்ளக்குறிச்சியில் சகோ. ரஹ்மதுல்லாஹ் நடத்தும் பயிற்சி மையம் உள்ளது.  பொருளாதாரத்தில் பின் தங்கிய முஸ்லீம் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுவதாக சகோ. ரஹ்மதுல்லாஹ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பயிற்சி மையங்களுக்கு பஞ்சமில்லை, பணமும் ஒரு பிரச்சனை இல்லை (இலவச பயிற்சிகள் பல நடத்தப்படுகின்றன). வேறு என்ன குறை..? தகுதி உள்ள முஸ்லீம் மாணவர்கள்தான் குறை. முஸ்லீம் மாணவர்களிடம் இதில் தேர்ச்சி பெறும் அளவிற்கு அறிவு இருக்கின்றது. ஆனால் தன்னம்பிக்கைதான் இல்லை. இலக்கை அடையும் வரை தேவையான பொறுமையும் இல்லை. முஸ்லீம்களில் படிப்பவர்களே குறைவு. அதுவும் படித்துவிட்டு தன் படிப்புக்கேற்ற தகுதியான வேலை பார்ப்பவர்கள் மிக குறைவு. இதை நிலை மாற வேண்டும். முஸ்லீம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்ட வேண்டும். பொறுமையை போதிக்க வேண்டும். நாம் சாப்பிட பிறந்தவர்கள் இல்லை, சாதிக்க பிறந்தவர்கள் என்ற உணர்வை சிறுவயதிலேயே அவர்களுக்குள் விதைக்க வேண்டும். உணவு, இருப்பிடம் என்பது வாழ்கையின் ஒரு பகுதி தானே தவிற வாழ்க்கையே அதுவல்ல. முஸ்லீம்கள் தங்களின் இந்த குறுகிய சிந்தனையை விட்டு வெளியே வர வேண்டும். அதற்கு தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி பற்றிய விழிப்புணர்வும், ஊக்கமும், வழிகாட்டலும், பயிற்சியும் அளிக்க வேண்டும்.

இந்த தேர்வை பற்றிய முழு விபரங்கள் அறியவும், தேர்விற்கு தயாராவதற்கான வழிமுறைகள் பற்றி அறியவும்  Sithiqu.mtech@gmail.com  என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்.

Civil Services Examination - 2011
- இந்த தேர்வை பற்றிய விபரம்.

இது 3 கட்டங்களாக நடைபெறும் தேர்வு. முதல் கட்ட தேர்வு, இரண்டாம் கட்ட தேர்வு எழுத்து தேர்வாகும்.  மூன்றாம் கட்ட தேர்வு நேர்முக தேர்வாகும். முதல் கட்ட தேர்வு தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறும். தேர்விற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கடைசி தேதி : 21 மார்ச், 2011

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் : 

 அனைத்து இந்திய தபால் அலுவலகங்கள்

கட்டணம் : 

விண்ணப்பத்தின் விலை  ரூ.20 மற்றும் தேர்வு கட்டணம் ரூ.50.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
Secretary,
Union Public Service Commission,
Dholpur House, Shahjahan Road,
New Delhi - 110069

 
தேர்வு நடைபெறும் தேதி :
12 ஜூன், 2011

வயது வரம்பு :
33 வயது (முஸ்லீம்கள் உட்பட) பிற்படுத்தபட்ட வகுப்பினர்களுக்கு.
பொது பிரிவினருக்கு 30 வயது

தேர்வு எழுத தேவையான தகுதி :
ஏதாவது ஒரு பட்டப் படிப்பு படித்து இருக்க வேண்டும். கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.






முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்..!!
 



Tuesday, March 1, 2011

சிதறிக்கிடக்கும் பெரும்படை..!!



தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் வர இருப்பதினால் தேர்தல் வேலைகளும் அரசியல் கட்சிகளின் கூட்டணி அமைக்கும் வேலைகளும் மும்முரமாக உள்ளன. கட்சிகள் சீட்டிற்காக அணிமாறும் காட்சிகளும் அரங்கேற ஆரம்பித்து விட்டன. இஸ்லாமிய இயக்கங்களும், முஸ்லிம் அரசியல் கட்சிகளும் தங்களுடைய அரசியல் களத்தின் வேலைகளையும் தொடங்க ஆரம்பித்து விட்டனர். த.மு.மு.க வின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி அ.தி.மு.க வுடனும் முஸ்லிம் லீக் தி.மு.க வுடனும் கூட்டு சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம்களின் தாய் கழகமான முஸ்லிம்லீக் வழக்கம்போல் ஒன்றோ அல்லது இரண்டோ சீட்டுகளை மட்டும் பெற்றுக்கொண்டு திமுகவின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நிற்கலாம்!. அல்லது தங்களின் சின்னத்தில் போட்டியிடலாம்!. இது இக்கட்சிக்கு ஆரோக்கியமான வளர்ச்சியல்ல!. முழுகட்சியையும் அது திமுக விடம் அடகு வைத்து பல வருடங்கள் ஆகிவிட்டன!.
 


இதற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் ஒன்பது அல்லது பத்து என்று சீட்டுகளை பேரம்பேசி வாங்குவதும், பா.ம.க போன்ற கட்சிகள் எல்லாம் முப்பது சீட்டுக்களை பேரம்பேசி (டிமான்ட் வைத்து) வாங்கும் அளவிற்கு குறுகிய காலங்களில் அசூர வளர்ச்சியடைந்து விட்டார்கள்!. ஆனால் சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இருந்து வரும் முஸ்லிம்லீக் கட்சி, தன் பிறை சின்னத்தின் மறுபக்கமான “தேய்பிறையாகவே” இருந்து வருகின்றது!. முன்பு தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சியாக இருந்த ஒரு மாபெரும் கட்சி இன்று, பாராளுமன்றத்திற்கு ஒரே ஒரு சீட்டை மட்டும் பெற்றுக்கொண்டு அதிலும் சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தன்மானத்தை இழந்து நிற்கின்றது. சமீபத்தில் கூட நடைபெற்ற முஸ்லிம்லீக் கட்சி நடத்திய மாநாட்டிற்கு கூடிய கூட்டத்தினை கண்டால், நமக்கே பிரமிப்பாக இருக்கின்றது.! இவ்வளவு செல்வாக்கை வைத்துகொண்டு இக்கட்சி ஏன் மேலும் மேலும் வளர்ச்சிபெற முடியாமல் திணறுகின்றது என்று நம்மால் கணிக்க முடியவில்லை!.

மேலும் மனிதநேய மக்கள் கட்சி சுமார் பதினேழு தொகுதிகளில் தங்களுக்கு வெற்றிபெறும் அளவிற்கு செல்வாக்கு உள்ளதாக கண்டறிந்து பொதுக்குழுவில் அந்த தொகுதியையும் அறிவித்தனர். இருந்தும் இவர்கள் மூன்று முதல் ஐந்து சீட்டுகளை மட்டுமே பெற்றுக்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. எத்தனை எத்தனை இஸ்லாமிய இயக்கங்கள் வந்தாலும் இன்னும் ஒன்றிற்கும் இரண்டிற்கும் அல்லது ஏதோவொரு குறிப்பிட்ட கோரிக்கையை நிறைவேற்றினாலே, “சமுதாய ஓட்டு அத்துனையும் உங்களுக்கே” என்று பேரம் பேசி, சமுதாயத்தினை அடகுவைக்கும் அவலநிலை மாறவேண்டும்!. நம்மின் பலத்தினை நாமே கேவலமாக எடைபோடுவதும் சரியல்ல!.

   
 
இந்திய தவ்ஹீது ஜமாத்தும் போட்டியிடப் போவதாக தெரியவில்லை!. ஆனால் ஆதரவை, அல்லது பிரச்சாரத்தினை மட்டும் இவர்கள் செய்வார்கள் என்றே தோன்றுகின்றது. நிச்சயமாக த.த.ஜ அணிக்கு மாற்றமான அணியில் இவர்கள் இடம்பெறுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்!. இப்படியே நாம் இக்கரைக்கு அக்கறை என்று முடிவெடுப்பதிலேயே அணைத்து இயக்கங்களும் தங்களை முன்னிலைப் படுத்துகின்றன.

மேலும் மானம் காக்குமா ம.ம.க?. என்று ஒருபுறம் இக்கட்சியை 18 சீட்டுகள் பெறவேண்டும் என்று தூண்டுவதும், பின் சேலத்தில் நடைபெற்ற த.த.ஜ பொதுக்குழுவில் ம.ம.க எங்கு நின்றாலும் தோற்கடிப்போம் என்று சீண்டுவதும், மாறுவேடம் போடுவதும் சமுதாய இயக்கமான த.த.ஜ விற்கு அழகல்ல!. ஒன்று இவர்கள் போட்டியிடவேண்டும்!. இல்லையென்றால் களத்தில் இருக்கும் இஸ்லாமிய இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் அமைதியாக இருந்துவிட்டு செல்லவேண்டும். த.த.ஜ - தமுமுக விற்க்கு இடையே உள்ள ஈகோ மற்றும் பொறாமை காரணமாக சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கிடைக்கவிடாமல் செய்வதற்க்கு ஆயிரமாயிரம் காரணம் கூறினாலும், இன்று நமக்கு உள்ள அரசியல் அதிகார தேவைக்கு அது உதவாது!. மாறாக அது நம்மை மேலும் வலுவிழக்கவே செய்யும்!.

முஸ்லிம் லீக் நின்றாலும் பிடிக்காது. ம.ம.க நின்றாலும் பிடிக்காது. ஆனால் நாங்களும் நிற்க மாட்டோம் என்று அடம்பிடிப்பது எந்தவகையில் நியாயம் என்று சமுதாய நலனை முன்னிலைப் படுத்தும் த.த.ஜ சிந்திக்கவேண்டும். உங்களுக்கிடையே உள்ள ஈகோவை எல்லாம் தேர்தலில் காண்பித்து நம் சமுதாயத்தின் பிரதி நிதித்துவத்தினை அடைய விடாமல் தடுப்பதை சிந்திக்கவேண்டும். அல்லது தேர்தலில் நாங்கள் நிற்கமாட்டோம் என்ற நிலைபாட்டில் இருந்து மாறி, தேர்தல் களம் கண்டு, முஸ்லிம்களின் பிரதிநிதியாக சட்டமன்றம் சென்று, நம் சமுதாய தேவைகளை நிறைவேற்றவேண்டும். அதுதான் ஒரு சிறந்த இயக்கத்திற்கு முன்னுதாரணமாக இருக்கும். அரசியல் வேண்டாம் என்றால் தேர்தலில் பிரச்சாரமும் செயக்கூடாது!. எந்த ஓட்டுப்பொறுக்கி அரசியல் வாதிகளையும் சந்திக்கக்கூடாது!.

மேலும் ஜமாத், இயக்கம் போன்ற அடைமொழிகளுடன் சிறிய சிறிய பத்துக்கும் மேற்பட்ட இன்னபிற இஸ்லாமிய இயக்கங்களும் அவர்கள் மனதிற்கு என்ன தோன்றியதோ, அதையே ஆதாரமாக வைத்து பணத்தினை மட்டும் பெற்றுக்கொண்டு தேர்தல் வேலைகள் செய்வதும் ஆரோக்கிய மானதல்ல!.

இந்த இயக்கங்கள் அனைத்தும் ஒன்றினைந்தாலே திமுக. அதிமுக காங்கிரஸ் என்று ஏதாவதொரு பெரிய அரசியல் கட்சியுடன் நாமும் முப்பது அல்லது நாற்பது தொகுதிகள் என்று பேரம்பேசி அதை இஸ்லாமிய இயக்கங்களுக்குள் பகிர்ந்துகொள்ளலாம். இது சாத்தியமா என்றால் ஒரே இறைவனை ஏற்றுக்கொண்ட நம்மால் சாத்தியமே!. இதுபோன்ற ஒரு முடிவை நாம் எட்டாதவரை இன்னும் பத்து தேர்தல்கள் வந்தாலும், இரண்டு மூன்று என்று மட்டுமே முஸ்லிம் சட்டமன்ற உறுபினர்களை சட்டமன்றத்தில் காணலாம். மேலும் தேர்தல் முடிந்தபிறகு ஆஹா பார்த்தீர்களா?. 234 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரே ஒரு முஸ்லிம்!. ஒரு அமைச்சர் கூட இல்லை!. இஸ்லாமியர்களின் நிலையை முன்னேற்ற சச்சார் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தவேண்டும் என்று போராட்டம் செய்து என்ன பயன்?.
 


தேசிய அளவிலும் நம்மை வழிநடத்த ஒரு வலிமையான இஸ்லாமிய இயக்கமோ அரசியல் கட்சியோ இல்லை!. அதற்கு முதலில் மாநிலம் தழுவிய அணைத்து இஸ்லாமிய இயக்கங்களும் முதலில் மாநில அளவில் ஒன்றினைய வேண்டும்!. பின் ஒன்றிணைந்த இக்கட்சிகள் தேசிய அளவில் பாராளுமன்ற தேர்தலில் ஒரணியில் நின்றால், எம்பி தொகுதியையும் நம் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் பெறமுடியும். ஆனால் செய்வார்களா?. இதுவே நம் அரசியல் உரிமையை பெற சரியான வழிமுறையாக இருக்க முடியும். முஸ்லிம்களின் ஓரணி என்ற கோட்பாடே நம் அரசியல் தீர்வுக்கு வழிவகையாகும். பின் நமக்கு சச்சார் கமிட்டியும் தேவை இல்லை!. சாச்சா கமிட்டியும் தேவை இல்லை!. நம்மை நாமே மாற்றிக்கொள்ளாத வரை நமக்கு எந்த அரசியல் கட்சியும் உரிமையை வழங்க முன்வராது!.

கடந்த தேர்தலில் கூட அணைத்து இஸ்லாமிய இயக்கங்களும் சென்னையில் ஒன்று கூடி ஒரே கூட்டணியில் நிற்பது என்று முடிவெடுத்து கடைசியில் ஆளுக்கொரு திசையில் வழக்கம்போலவே சென்றுவிட்டனர். ஆக அரசியியலில் நமக்கு எதிரிகள் வேறு யாரும் அல்ல! நமக்கு நாமே எதிரிகள்!!.

முஸ்லிம் சமுதாயத்தின் ஜமாத்/லீக்/கழகம்/பேரவை மற்றும் இத்யாதிகள்:


1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
2. இந்திய தேசியலீக்
3.தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்
4. தமிழ் மாநில தேசிய லீக் (அல்தாப்)
5. தமிழ் மாநில முஸ்லிம் லீக்(ஷேக் தாவூத்)
6. தமிழ்நாடு முஸ்லிம் லீக் (தாவுத் மியக்கான்
7. தமிழ்நாடு மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் (சலிமுத்தீன்)
8. மமக என்ற “முஸ்லிம் பாமகா
9. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
10. இஸ்லாமிய இலக்கியக் கழகம்
11. இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம்
12. முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம்
13. மனிதநேய மக்கள் கட்சி
14. மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் (பாலை ரபீக்)
15. ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம் (சென்னை ஹமீத்)
16. ஜனநாயக மக்கள் கட்சி
17. இந்திய தேசிய மக்கள் கட்சி
18. இந்திய தேசிய மக்கள் கட்சி (குத்புதீன் ஐபக்)
19. தேசியலீக் கட்சித
20. இந்திய தவ்ஹீது ஜமாத்
21. இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்ட்
22. மறுமலர்ச்சி தவ்ஹீத் ஜமாஅத் (இணையதளம்)
23. ஜமாத் இ இஸ்லாமி
24. ஜமாத்துல் உலமா
25. ஷரியத் பாதுகாப்பு பேரவை
26. இஸ்லாமிய இலக்கிய பேரவை
27. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா
28. எஸ்.டி.பி.ஐ -சோசியல் டெமோகிராடிக் பார்ட்டி ஆப் இந்தியா
29. பாரதிய முஸ்லிம் பார்ட்டி (சித்தீக்)
30. மில்லி கவுன்ஸில்
31. மஜ்லிஸே முஷாவரத்
32. ஜம்மியத்துல் உலமா இ ஹிந்த்
33. தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன்
34. முஸ்லிம் தனியார் சட்டவாரியம்
35. ஜம்மியத்துல் உலாமா (அர்ஷத் மதனி)
36. தமிழக முஸ்லிம் தொண்டு இயக்கம்
37. சிறுபான்மை புரட்சி இயக்கம் (லியாகத்அலிக்கான்)
38. சென்னை சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் கூட்டமைப்பு
39. தமிழ்நாடு சுன்னத்வல் ஜமாஅத் ஐக்கிய பேரவை
(ஷேஹூ அப்துல்லாஹ் ஜமாலி)
40. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்

ஏம்பா, இனி நாம ரெண்டுபெரும்தான் மிச்சம்!. நாமளும் பிச்சை எடுப்பதை விட்டுவிட்டு “பக்கீர்ஷா லீக்/ பேரவை/ ஜமாத்/ கழகம்” என்று ஆரம்பிச்சா என்ன?.
இயக்கத்திற்கு மட்டும் குறையில்லை!. மற்றும் இங்கு குறிப்பிட மறந்து விட்டது பத்திற்கு மேல் இருக்கும்!. இந்தியா முழுமைக்கும் உள்ள நம் எதிரி இயக்கங்களின் எண்ணிக்கை இதில் பாதி கூட இல்லை!. ஆனால் தமிழ்நாட்டளவில் மட்டும் நாம் கண்ட அமைப்புகளின் என்னிக்கையை கண்டீர்களா?.

இந்திய மக்கள் தொகையைப்போல் எண்ணிக்கையில் அதிகமாகவே உள்ளது நம் இயக்கங்கள்..! ஆனால் நாம் தான் ஊட்டச்சத்து இல்லாத சவலைப் பிள்ளையாக காலம் காலமாக இருந்து வருகிறோம்..!! 


நன்றி: இணையம்