Saturday, March 12, 2011

ஜப்பானை சீரழித்த சுனாமி..!



நேற்று வெள்ளிக்கிழமை காலை ஜப்பானில் 8.9 ரிக்டர் அளவில் மிகவும் மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் அந்நாட்டில் பெரும் சீரழிவு ஏற்பட்டிருக்கிறது. ஜப்பானின் தலைநகரமான டோக்கியோ இந்த சுனாமியால் முழுமையாக சிதைந்து போய் கிடக்கிறது. டோக்கியோ நகரின் வடக்குப்பகுதியில் இருந்த செண்டாய் ஏர்ப்போர்ட் முழுமையாக சுனாமியால் தாக்கப்பட்டு நிலை குலைந்து விட்டது. 150 ஆண்டுகளில் இப்படி ஒரு சுனாமியை ஜப்பான் சந்தித்ததில்லை என்று சொல்லப்படுகிறது. 

உயிரழந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு வருகிறது. கடற்கரைகளில் சுனாமியால் அடித்து செல்லப்பட்ட கார்கள், வீடுகள், மரங்கள் என்று குப்பை மேடாய் எங்கும் காட்சி அளிக்கிறது. பெரும் உயர கட்டிடங்களும் இந்த சுனாமியால் தாக்கப்பட்டு தீப்பிடித்து எரிந்த வண்ணம் இருக்கிறது. ஜப்பானில் உள்ள எண்ணை, எரிவாயு ஆலைகள் தீப்பிடித்து எரிந்து நாசமாகியது. அணு உலைகளையும் சுனாமி சிதைத்திருப்பதால் அணுக்கதிர் கதிர் வீச்சு அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஜப்பான் அரசு அறிவித்திருக்கிறது. நகரத்தின் பாலங்கள், சாலைகல் பெருத்த சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. நேற்று வரை வல்லரசாக வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் இன்று வாழ்க்கையை தொலைத்து விட்டு வாசலில் நிற்கிறார்கள். இது தான் இவ்வுலக வாழ்க்கையின் எதார்த்தம்..!!!

ஜப்பான் முன்பு போல் மறுவாழ்வு பெற்று நிமிரவும், அந்நாட்டு மக்கள் இழந்தவற்றை பெற்று நிம்மதியான வாழ்க்கையடையவும் இறைவனை பிரார்த்திப்போம்..!

சுனாமியால் சீரழிந்த ஜப்பானின் சோகக்காட்சிகள் புகைப்படங்களாக கீழே உள்ள சுட்டியில் காணலாம்.
http://www.theatlantic.com/infocus/2011/03/earthquake-in-japan/100022/



குறிப்பு: ஜப்பானின் இந்த பேரழிவில் காணாமல் போனவர்களை தேட நம் தளத்தின் இடது பக்கத்தில் உள்ள ”ஜப்பான் சுனாமி - விபரம் தேட” என்ற தேடும் வசதியை பயன்படுத்தி, அதில் தேடி விபரம் அறியலாம். I'm looking for someone என்பதை சுட்டிய பிறகு வரும் காலி இடத்தில் தேடப்படுவரின் பெயரை கொடுத்தால் அவரின் தற்போதைய விபரம் கிடைக்கும். 

0 comments:

Post a Comment