உம்ரா, ஹஜ், விசிட்விசாவில் சவுதி வருபவர்கள் இங்கேயே இருந்து சம்பாதிக்கும் நோக்கத்தில் தங்கி விடுகிறார்கள். குடும்ப பொருளாதாரத்தை கொண்டு அவர்கள் செய்வது சரி என்றாலும் சவுதி அரசாங்கத்தின் சட்டப்படி இது குற்றம். இன்னும் சிலரோ தங்கள் குடும்ப உறுப்பினர்களை உம்ரா, ஹஜ் கடமைகளை நிறைவேற்ற சவுதி கூட்டி வந்து, அதன் விசா காலாவதியாகும் தேதி பற்றிய விபரம் தெரியாத அறியாமையால் தங்க வைத்து பிரச்சினைக்கு உள்ளாகிறார்கள். இதுவும் சவுதியில் குற்றமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு சிறைத்தண்டனையும், பெரும் அபராத தொகையும் விதிக்கப்படுகிறது. அப்படி சவுதி வந்து, தங்கி உம்ரா, ஹஜ், விசிட் விசாக்கள் காலாவதி ஆனவர்களுக்கு ஒரு நற்செய்தி..!! சவுதி அரசு தங்கள் மன்னருக்கு நடந்து வரும் மருத்துவ சிகிச்சையின் வெற்றியை கொண்டாடும் வகையில் இவர்களுக்கு பொது மன்னிப்பை வழங்கி சில நாட்கள் சிறைத்தண்டனையுடன், அபராதம் எதுவுமில்லாமல் தாய் நாடு அனுப்பி வைக்கப்போவதாக சமீபத்தில் அறிவித்துள்ளது.
இந்த பொது மன்னிப்பு வழங்கும் காலம் மார்ச் மாதம் 23, 2011-ல் முடிவடைகின்றது. எனவே விசா காலாவதியாகி இனி எப்படி தங்கள் நாட்டுக்கு போவது என்று நினைத்து கொண்டிருப்பவர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நம் சகோதரர்கள் யாரேனும் அப்படி இருந்தால் அவர்களுக்கு உடன் இந்த செய்தியை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதற்காக எப்படி விண்ணப்பிப்பது என்பதை பார்ப்போம். ஒரிஜினல் பாஸ்போர்ட் இல்லாதவர்கள் அவுட் பாஸும் (out pass), ஜவஸாத் அலுவலத்திலிருந்து உம்ரா, ஹஜ் விசாவிற்கான அத்தாட்சி கடிதத்தையும் கொண்டு செல்ல வேண்டும். அவுட் பாஸ் பெற வேண்டுமானால் சம்பந்தப்பட்டவர்களின் பாஸ்போர்ட் நகலுடன், ஊரில் உள்ள ரேஷன் கார்டு அல்லது கார் லைசன்ஸ் அல்லது வாக்காளர் அடையாள அட்டை என்று ஏதேனும் ஒரு அரசாங்க அத்தாட்சியை வைத்து விண்ணப்பிக்க வேண்டும். கிடைக்கும் அவுட் பாஸ் 3 மாசத்திற்கு செல்லுபடியாகும்.
இவர்கள் ஜவஸாத்தின் பாதுகாவலில் வைக்கப்பட்டு பிறகு தர்ஹீல் என்ற காவல் நிலையத்திலிருந்து நேரடியாக தாயகத்திற்கு அனுப்பப்படுவார்கள். ஹரூப் என்ற வேலையில் இருந்து ஓடிச்சென்றவர்கள் திரும்பி வந்து தன் கஃபிலிடம் வந்து பிரச்சினைகளை பேசி முடித்து அவரிடமிருந்து NOC (No Objection Certificate) வாங்கி வரவேண்டும்.
விசா பிரச்சினையில் இருப்பவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி நல்லபடியாக தாயகம் போய் சேர புதுப்பட்டினம் டுடே அவர்களை வாழ்த்துகிறது..!!
தகவல் மூலம்:
நன்றி: www.moi.gov.sa (சவுதி அரசின் இணைய தளம்)



1 comments:
good news keep it up. go to visit www.sinthikkvum.net. thank you bro.
Post a Comment