Monday, February 21, 2011

சமூக விரோதிகளின் தொடரும் அராஜகம்..!!



நம் ஊருக்கு அருகில் இருக்கும் ஊரான மல்லிப்பட்டினத்தில் கடந்த பிப்ரவரி மாதம், 18-ந்தேதி (2011) வெள்ளியன்று சமூக விரோத சக்திகள் மீண்டும் தங்கள் கை வரிசையை காட்டியிருக்கின்றனர். வெள்ளிக்கிழமை அன்று அதிகாலையில் கடற்கரை ஓரமாக உள்ள இரண்டு கீற்று குடிசைகள் தீப்பற்றி எரிந்துள்ளது. அதை பற்ற வைத்த சமூக விரோதிகள் இருவரையும் மல்லிப்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் வைத்து மடக்கி பிடித்து விட்டார்கள். அவர்களை உடனடியாக சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்தில் ஊர்ப் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணை மூலம் அவர்கள் இருவரும் கோட்டைப்பட்டினம் பக்கத்தில் உள்ள புதுப்பட்டி என்ற ஊரைச்சார்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. அவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக மல்லிப்பட்டினம் கடற்கரையில் நமது ஊர் கரையூர் தெருவைச்சார்ந்த நாகராஜ் என்பவரிடம் வேலை பார்த்து வந்தார்கள் என்று தெரிகிறது. இதற்கு முன்பு மல்லிப்பட்டினத்தில் நடந்த இரண்டு திருட்டுகளிலும் இவர்கள் இருவரும் ஈடுபட்டுள்ளதும் விசாரணையின் மூலம் தெரிய வந்தது. கடற்கரை ஓரமிருந்த குடிசைகளுக்கு தீ வைத்ததின் மூல காரணமாக இருந்து செயல்பட்டது நம் ஊரைச்சார்ந்த நாகராஜ் என்றும் தெரிய வந்துள்ளது.

மக்களின் நிம்மதியை குலைப்பதில் சமூக விரோதிகளுக்கு ஏன் தான் இத்தனை விருப்பமென்று புரியவில்லை..!!

தகவல் உதவி:
நன்றி: சகோதரர் ஹசன் (hashanau@gmail.com)

0 comments:

Post a Comment